Show all

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து

பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அந்தக் கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு தனித்தனியாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

பீகார்முதல்வர் நிதிஷ்குமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமான மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் ஒளி விளக்காக உங்களின் வரலாற்று புகழ்மிக்க தேர்தல் வெற்றி அமைந்ததற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உங்கள் தலைமை பண்பினுடைய வெற்றி இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. உங்கள் ஆட்சி மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றும்

லாலு பிரசாத் யாதவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

லோக நாயகர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தகுதிவாய்ந்த சீடர் நீங்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவீர்கள். பீகார் தேர்தல் முடிவுகள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும் மாபெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது என்றும் வைகோ கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.