Show all

போராட்டமே வாழ்கையா! புதிய கார் என்று ஏமாற்றி, விபத்தில் சிக்கிய காரை விற்றது, புதிய கார்கள் விற்பனை செய்யும் கடை

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சண்டிகர் மாநிலத்தின் பஞ்ச்குலாவில் செக்டார் 16ஐ சேர்ந்தவர் அதுல்குமார் அகர்வால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பனாரி தாஸ் ஆட்டோமொபைல்ஸ் என்ற டாடா நிறுவன கார் விற்பனையாளரிடமிருந்து 3.61 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு காரை வாங்கியுள்ளார்.

புதிதாக அவர் வாங்கிய அந்த டாடா காரில் வாங்கப்பட்டதில் இருந்தே பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதனால் சில மாதங்கள் கழித்து காரை முதல் பராமரிப்புக்காக டாடாவின் பராமரிப்பு மையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இது போல் பல முறை பராமரிப்பு மையத்திற்கு அதுல் தனது காரை எடுத்துச் சென்ற நிலையிலும் காரில் ஏற்பட்ட பிரச்சனை சரிசெய்யப்படாமலே இருந்ததால் அதுல் வேறுவழியின்றி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்டார்.

இதனைத்தொடர்ந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு ஒன்று சண்டிகரில் கடந்த கடந்த ஆண்டு அதுல்குமாரின் காரை பரிசோதனை செய்தது. அக்குழுவினரின் ஆய்வின் முடிவில் காருக்கான உதிரிபாகங்களான டர்போசார்ஜர், இஞ்ஜெக்டர் மற்றும் பைப்லைன்கள், ஆல்டர்னேட்டர் ஆகியவற்றை புதிதாக மாற்றிய போதும் வாடிக்கையாளர் கூறியது போல கரும்புகை வெளியாகும் பிரச்சனை இருந்துள்ளது. மேலும் வாகனம் ஸ்டார்ட் ஆவதிலும் பிரச்சனை இருந்துவந்துள்ளது.

பின்னர் பல கட்ட விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பன்சாரி தாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் அதுலிடம் விபத்தில் சிக்கிய பழைய காரை விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் தவறு செய்த பனாரி தாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திற்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது, மேலும் பாதிக்கப்பட்ட அதுல் கார் வாங்க செலுத்திய 3.61 லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பச் செலுத்த வேண்டும் அல்லது பழைய காருக்கு பதிலாக புதிய காரை கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,908.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.