Show all

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை ஒன்று 14 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளி வளாகத்தில் ஒரு சிறுத்தை நடமாடுவதை காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 

இதுபற்றி அவர், பள்ளி நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து,  காவல்துறைக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே காவல்துறையினரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

இதில் ஊடகத்தினர் உட்பட 3 பேர் சிறுதையின் தாக்குதலுக்கு ஆளானர்கள். இதையடுத்து, சிறுத்தை மீது துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. உடனே சிறுத்தை மயக்கம் அடைந்தது. இதனால் சிறுத்தையைப் பிடிப்பதற்காக காலை முதல் நடந்து வந்த போராட்டம் 14-மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.