Show all

சிரிக்க வைத்த அறங்கூற்றுவர் ஏ.கே.சிக்கிரி! சிரிப்பலையில் அதிர்ந்த உச்ச அறங்கூற்றுமன்றம்

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக ஆளுநர் புண்ணியத்தில், கர்நாடகத்தில் நடக்கும் அரசியல் குழப்பம் குறித்து உச்ச அறங்கூற்றுமன்றத்தில் அனல் பறக்கும்வாதம் நடந்து கொண்டு இருக்கும் போது, அறங்கூற்றுவர் ஒரு நகைச்சுவையைச் சொல்லி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

அறங்கூற்றுவர் ஏ.கே.சிக்கிரி தனது செல்பேசிக்கு வந்த சட்டமன்றஉறுப்பினர்கள் தொடர்பான நகைச்சுவையைப் பற்றிக் கூறினார். அப்போது, அவர் கூறுகையில், இந்த நேரத்தில்நான் ஒன்றை குறிப்பிட வேண்டும் எனது புலனத்திற்கு கர்நாடக அரசியல் தொடர்பாக நகைச்சுவையொன்று பகிரப்பட்டுள்ளது. அதாவது சட்டமன்றஉறுப்பினர்கள் தங்கி இருக்கும் சொகுசு உணவகத்தின் உரிமையாளர் ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கிறாராம். அதில் என்னிடம் 117 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், நான் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க முடியுமா, என்னை எப்போது ஆட்சி அமைக்க அழைப்பீர்கள் என்று கேட்பது போன்ற நகைச்சுவை பரவி வருகிறது என்றார். இதைக் கேட்ட மற்ற வழக்கறிஞர்களும், அறங்கூற்றுவர்கள் எஸ்ஏபோப்தே, அசோக் பூஷன் ஆகியோரும் சில நிமிடங்கள் தங்களின் வாதத்தை மறந்து சிரித்தனர். இதனால், அறங்கூற்றுமன்ற அறையே சில நிமிடங்கள் சிரிப்பலையில் அதிர்ந்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,791.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.