Show all

ராகுல் காந்தி கண் அடித்தல் குறித்து கேரள நடிகை பிரியா வாரியர் பெருமிதம்!

04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராகுலுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தை வெகு சிறப்பாக பயன் படுத்திக் கொண்டதாக ஒட்டு மொத்த இணையமும் பாராட்டி வருகிறது.

மோடியிடம் சென்று அவரை ராகுல் கட்டியணைத்தார். இதை சற்றும் எதிர்பாராத ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ராகுலின் செயலை வரவேற்றனர். இதற்கு ராகுல் காந்தி அசட்டையாக மோடியை பார்த்து கண்ணடித்தார்.

இதை பிரியா வாரியருடன் ஒப்பிட்டு இணையப் பயனாளர்கள் விவாதமே நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மலையாள படத்தில் கண் அடித்து ஒரே நாள் இரவில் பிரபலமாகிய பிரியா பிரகாஷ் வாரியர் கூறுகையில், நான் கல்லூரி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினேன். அப்போது தான் ராகுல் காந்தியும் கண்ணடித்தது குறித்து அறிந்தேன். தன்னை போல் ராகுல் காந்தியும் கண்ணடித்தது மகிழ்ச்சி என்று கேரள நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் இனிதான சைகையாகும். கண்ணடிப்பு எனக்கு மிகப் பெரிய அங்கிகாரத்தைப் பெற்றுத் தந்தது. ராகுல் காந்தியை கண்ணடிப்பு புகழ் ராணியே பாராட்டி விட்டார் அப்புறம் என்ன.

நடுவண் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி உணர்ச்சி பொங்க பேசினார். அப்போது அவர் கூறுகையில் பிரதமருக்கு எதிராக என் மனதில் ஏராளமான வெறுப்புகள் இருக்கும் என நீங்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

ஆனால் உண்மை அது இல்லை. உண்மையை சொல்ல போனால் மோடி அவர்கள், பாஜகவினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆகியோர் எனக்கு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருப்பதன் பொருளைச் சொல்லிக் கொடுத்துள்ளனர். அதுபோல் இந்தியனாக இருப்பதன் பொருளையும் ஹிந்துவாக இருப்பதன் பொருளையும், சிவபெருமானின் பக்தனாக இருப்பதன் பொருளையும் சொல்லிக் கொடுத்துள்ளனர் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,854. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.