Show all

அருண்ஜெட்லி ஊழல்பற்றி விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைத்து இருக்கிறார் கெஜ்ரிவால்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது ஊழல் நடந்ததாக டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் தன் மீதான ஊழல் புகாரை அருண் ஜெட்லி மறுத்து உள்ளார். இந்த நிலையில் இந்த ஊழல் பற்றி விசாரிக்க விசாரணைக் கமிஷன் ஒன்றை டெல்லி முதல் அமைச்சா; கெஜ்ரிவால் அமைத்து இருக்கிறார்.

ஏற்கனவே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கும் டெல்லி துணை நிலைஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. விசாரணைக் கமிஷன் அமைக்கும் அதிகாரம் டெல்லி மாநில அரசுக்கு கிடையாது என்று நஜீப் ஜங் கூறி உள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நஜீப் ஜங் ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கடிதம் எழுதி இருப்பதற்கு முதல் அமைச்சா; கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தனது அரசியல் தலைவர்களைப் பாதுகாக்க ஆளுநர் இதை எதிர்ப்பதாக கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.