Show all

கடமையாற்றுங்கள்! இந்தியத் தலைமை அமைச்சருக்கு, கமல் கோரிக்கை

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக மக்கள் நியாயத்திற்காகப் போராடி வருகிறார்கள். நியாயம் வழங்கப்பட்டுவிட்டது. அதை செயல்படுத்துவது உங்கள் கடமை. அதை நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை. பாமரர்கள் இது கர்நாடக தேர்தலுக்காக என்று நம்ப தொடங்கிவிட்டார்கள். அது அவமானகரமானது., ஆபத்தானதும் கூட. அதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். மக்களின் நலனுக்காகவும், உழவர்களின் நலனுக்காகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். எனது கோரிக்கையை கடிதம் வாயிலாகவும் அனுப்புகிறேன். வாழ்க இந்தியா என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,756.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.