Show all

நீரின்றி கருகிய மல்லிகை; நஞ்சருந்தி உழவர் தற்கொலை! நெஞ்சு பொறுக்குதில்லையே என்று

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கரூர் மாவட்டம் தொகைமலை அருகே சோப்பலாப்பட்டியை சேர்ந்தவர் உழவர் பிரபு. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மல்லிகை பயிரிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யாத காரணத்தால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மல்லிகை பூக்களுக்கான தருணம் தற்போது நிலவி வரும் நிலையில் பிரபுவின் மல்லிகை தோட்டத்தில் செடிகள் தண்ணீர் இன்றி காய்ந்தன.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான உழவர் பிரபு நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,756.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.