Show all

காவிரியில் மாசு கலந்த நீரை கர்நாடகா திறந்துவிடுவதை நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிபடுத்தியது

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக அரசு காவிரி நீரில் மாசு கலந்த கழிவு நீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது. காவிரியில் கழிவு நீர் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதை விசாரித்த உச்ச அறங்கூற்றுமன்றம் காவிரியில் மாசு கலந்த கழிவு நீர் கலப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நேற்று பதிகை செய்த இடைக்கால அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சிற்றாறுகளின் மூலம் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த மாசு கலந்த கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மூலமாக தமிழகத்துக்கு திறந்துவிடுகிறது

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிக்கையால், காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வழக்கில் தமிழகத்துக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,722. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.