மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவாக டெல்லியில் அறிவுசார் மையத்தை விரைவில் கெஜ்ரிவால் அரசு அமைக்க உள்ளது. கலாமின் புத்தகங்கள் மற்றும் உடைமைகளை வைத்து அறிவுசார் மையம் அமைக்க டெல்லி அரசு தயாராக இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. கலாம் வசித்த டெல்லி வீட்டை அக்டோபர்31க்குள் காலி செய்யுமாறு நடுவண் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் தனிச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து கலாம் பயன்படுத்தியப் பொருட்கள் அக்டோபர் கடைசி வாரத்தில் ராமேசுவரம் வந்து சேர்ந்தன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.