Show all

ஒருவர் மீதுமட்டும் வழக்கு! பத்துக்கு மேற்பட்டோர், எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் பதிவிட்ட போதும். ஒரே கல்லில் பத்து மாங்காயா?

29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வரும் எம்.ஜே.அக்பர் இதழ்ஆசிரியராக பணியாற்றியபோது,  சக பெண் இதழியலாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் இதழியலாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 

இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை தலைமைஅமைச்சர் மோடி பதவி நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
 
இந்த நிலையில் நடுவண் அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக முதலாவதாக பாலியல் புகாரை பதிவிட்ட  இதழியலாளர் பிரியா ரமணி கடந்த ஆண்டு அவர் எழுதிய கட்டுரையை சுட்டிக்காட்டினார். பணியிடத்தில் நேரிட்ட தொல்லை தொடர்பாக பெயர் தெரிவிக்காமல் கட்டுரையை எழுதினார், இப்போது கட்டுரையில் எம்.ஜே. அக்பரைதான் குறிப்பிட்டேன் என கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக மவுனம் காத்த எம்.ஜே. அக்பர், வழக்கறிஞருடன் ஆலோசனையை மேற்கொண்டு நடவடிக்கையை எடுப்பேன் என கூறினார். இந்நிலையில் செய்தியாளர் பிரியா ரமணிக்கு எதிராக நடுவண் அமைச்சர் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒருவரைத் தேர்ந்தெடுத்து வழக்கு போடப்பட்டுள்ளது! பத்துக்கு மேற்பட்டோர், இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் பதிவிட்ட போதும். ஒரே கல்லில் பத்து மாங்காயா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.