Show all

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக போராட்டம்

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பஞ்சாபில் 7 கிராமங்களில் சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து, சீக்கியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பேபால் கலன் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் பலியான கோட்காபுராவைச் சேர்ந்த குர்ஜீத் சிங் குடும்பத்தினரை ராகுல்காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.