இந்தியாவில் அனைத்து
அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில்
பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு எண்கள் அவசர அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாட்டின்
அனைத்து அவசர கால உதவி அழைப்புகளுக்கும் ஒரே எண்ணை அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு
ஏப்ரல் மாதம் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் தனது அறிக்கையில் பரிந்துரை
செய்திருந்தது. இந்நிலையில் தற்போது
112 என்ற எண்ணை இந்தியாவின் தேசிய அவசர எண்ணாக
கொண்டு வர நடுவண் அரசு முடிவு செய்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.