Show all

வரலாறு காணாத வன்முறைப் பேச்சு! பெண்களுக்கெதிராக, மலையாள நடிகர் கொல்லம் துளசி

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் நடந்த பொதுக் கூட்டத்தில், மலையாள நடிகர், கொல்லம் துளசி பேசியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கென, தனி பாரம்பரியம் உள்ளது. இதை மீறி, கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டால், மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

வழக்கமான நடைமுறையை மீறி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் இரண்டு துண்டாக வெட்டப்படுவர். வெட்டப்பட்ட உடலின் ஒரு பாதி, திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டு, டில்லிக்கும் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.