Show all

திருமணத்துக்கு பணம் எடுக்க முடியாததால் விவசாயி தற்கொலை

     உத்தரப் பிரதேச மாநிலம், சத்பூர் கிராமத்தில் மகனின் திருமணத்துக்கு வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாததால், விரக்தி அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:

     சத்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ் குமார் (அகவை.48). அவர் தனது மகன் திருமணத்தையொட்டி, பணம் எடுப்பதற்காக வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருந்தும் பணம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம் குடித்தார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த அவரை அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.