சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆவதை யாராலும்
தடுக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- சசிகலா அ.தி.மு.க.பொதுச்செயலாளராக
வேண்டும் என்பதை அவர்களது பொதுக்குழு, செயற்குழு முடிவு செய்யும். சசிகலா அ.தி.மு.க.
பொதுச்செயலாளர் ஆவதையோ, முதல் - அமைச்சர் ஆவதையோ யாரும் தடுக்க முடியாது. அவர்களது
கட்சியினர் அதை விரும்புகிறார்கள். தற்போது ஆர்.கே. நகர் காலியாக இருக்கிறது. அதில்
அவர் போட்டியிட்டு கூட வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. தி.மு.க.
தலைவரை பார்க்க சென்ற வைகோ கார் மீதான தாக்குதல் சம்பவம் வருந்ததக்கது. மனித மாண்புகளுக்கு
பண்பாட்டுக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.