Show all

தமிழ்நாட்டில் மின் பகிர்மானம் பாதிக்கப்படாது! தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் ஒன்றிய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டுவிடும் என மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இம்மாநிலங்களின் மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5,100 கோடி பாக்கி நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. 

இதனால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மின் பகிர்மானம் பாதிக்கப்படாது என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். 

அதற்கு உரிய காரணமாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்துள்ள விளக்கமாவது:-  ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி, பதினாறு நாட்களுக்கு முன்பே வழங்கப்பட்டுவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் ஒன்றிய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டுவிடும் என மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது கீச்சுப் பதிவில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி, 19,ஆடியிலேயே (4.8.2022) வழங்கப்பட்டுவிட்டது. 

மத்திய அரசின் இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் விடைபெறும் வழிவகை இல்லை. நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை. 

சர்ச்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், உரியகாலமும் கொடுக்காமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதில்லை. சில காற்றாலை மற்றும் சூரிய ஒளி நிறுவனங்களுக்கு மட்டுமே குறைவான தொகை நிலுவையில் உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் வழங்கப்பட்டுவிடும். எனத் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,347.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.