29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 சண்டிகரில் டெல்லி ஆம்ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மற்றும் அரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கத்தாரும் சந்தித்து பேசினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லியில் காற்று மாசுபாட்டைப் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது . ஆலோசனை கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியார்களிடம் கூறியதாவது: நாங்கள் மிகவும் சாதகமானவற்றை பற்றியே விவாதித்தோம். நிலைமையை சமாளிக்க நாங்கள் அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரியான வருகையைத் தொடர்ந்து அவருக்கு அகாலி தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்பாட்டம் நடத்தினர். மேலும் கெஜ்ரிவாலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,607
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.