Show all

மோடியிடம் பேச சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலநிலை: அதிக பேர்களால் காணப்பட்டு வரும் கணொளி

குஜராத்தில் உள்ள காந்தி நகரில் விருது வழங்கும் விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார்.

     உலக மகளிர் நாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள காந்தி நகரில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களைக் கௌரவித்து விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

     அப்போது ஷாலினி சிங் என்னும் பெண், நடுவண் அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை மாநில அரசு முறையாக வழங்குவதில்லை என்று மேடை அருகே சென்று மோடிக்;;கு கேட்க வேண்டும் என்று கூச்சலிட்டார். உடனே, அந்தப் பெண்ணைப் பேசவிடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் இழுத்துச் சென்றனர். இந்தக் காட்சி காணொளியாகப் பதிவாகி இணையத்தில் அதிகம் பார்க்கப் பட்டு வருகிறது.

     உலக மகளிர் நாளில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப் பட்ட அநீதி குறித்து இந்தியாவே வெட்கி தலை குனிய வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.