Show all

டெல்லி, மும்பையில் பொதுமக்கள் போராட்டம்! 5நாள் அரசுமுறைப் பயணம், பிரிட்டன் சுவீடன் நாடுகளுக்கு மோடி

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபா கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதை மூடி மறைக்க பாஜகவினர் முயன்றுள்ளனர்.

இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரத்தில் 17 அகவை இளம்பெண் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் புகார் கூறி முதல்வர் அலுவகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

இதனை அடுத்து, அந்த பெண்ணின் தந்தை காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்தார். நாடு முழுவதும் கடும் அதிர்வை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரை நடுவண் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களில் பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் ஒன்று திரண்டு பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் பல சிறுமிகளும் கலந்து கொண்டனர்.

நாளை 5 நாள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன், சுவீடன் நாடுகளுக்கு செல்கிறார் மோடி... 

நாடு எரிந்து கொண்டிருக்கையில் நீரோ மன்னன் இசைக்கருவி வாசித்துக் கொண்டிருந்த கதையாக!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,758.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.