Show all

மோடியின் அரங்கத்தில் பந்து! திமுக தோழமைக் கட்சிகளின் போராட்டம், மோடி சந்திப்பு நேரம் ஒதுக்காவிடில் அரங்கேறும்

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வியாழனன்று மோடி சென்னை வந்தபோது கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.

திமுக தலைமையிலான அனைத்துக் கட்சியினர் கழிமுக மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்தினர். அதன் முடிவில் கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தனர். அப்போது மோடியை சந்திக்க நேரம் பெற்றுத் தரும்படி ஆளுனரிடம் கோரிக்கை வைத்தனர். ஆளுனரும் அதற்கு உரிய முயற்சிகளை செய்வதாக கூறினார்.

இதற்கிடையே திமுக தோழமைக் கட்சிகள் நாளை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசிக்க இருக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்திற்கு முன்பு தலைமைஅமைச்சரின் சந்;திப்புநேரம் குறித்து தங்களுக்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை எந்தத் தகவலும் கிடைக்காவிட்டால், காவிரி பிரச்னையில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். அடுத்தக்கட்டப் போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டமாக அமையும் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,758.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.