Show all

துணிச்சலான பெற்றோர்! ஒருலட்சம் லஞ்சம் கேட்ட கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வரை பிடித்துக் கொடுத்தனர்

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வராக ஆனந்தன் என்பவர் உள்ளார். கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான இடம் கோரி மாணவனின் பெற்றோர் முதல்வரை அணுகியுள்ளனர்.

பெற்றோரிடம் பள்ளி முதல்வர் ஆனந்தன் ஒருலட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு லஞ்சம் தர பெற்றோர் ஒப்புக் கொண்டுள்ளனர். பெற்றோர் இது தொடர்பாக நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையிடமும் புகார் அளித்துவிட்டு இன்று காலையில் முதல்வர் ஆனந்தனை சந்தித்து பணத்தை தர முடிவு செய்துள்ளனர். பள்ளி வளாகத்திற்குள்ளேயே உள்ள முதல்வரின் வீட்டில் வைத்து ரூபாய் ஒருலட்சம் லஞ்சப்பணத்தை கொடுக்கும் போது நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை ஆனந்தனை கையும் களவுமாக பிடித்தது.

இதனையடுத்து ஆனந்தனின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,753.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.