Show all

பிரம்மா மட்டுமே ஆரியர்கள் சொந்தமாக படைத்த தெய்வம்

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்மை காலமாக மகாபாரத காலத்தில் இணையத்தளம் இருந்தது, உயர் தொழில் நுட்ப ஆயுதங்கள் இருந்தன என்றெல்லாம் ஹிந்துத்துவா அமைப்பினர் பேசியும் பீற்றியும் வருகிறார்கள். 

நாடோடிகளாக கைபர் போலன் கணவாய் வழியாக நாவலந்தேயம் (ந்தேயா) வந்தடைந்தவர்கள் வாழ்க்கை அன்றையிலிருந்து இன்று வரை ஒட்டுண்ணி வாழ்க்கைதான். சொந்தமாக அவர்களுக்கிருப்ப தெல்லாம்  கட்டுக் கதைகள் மட்டுந்தாம். அவர்களின் தெய்வங்கள் எல்லாம் தமிழர் இறையியல் திரிபுதான். 

சிவன், விஷ்ணு, பிரம்மா முப்பெரும் தெய்வங்களுள் சிவனும், விஷ்ணுவும் தமிழர் தெய்வங்கள். பிரம்மா மட்டுமே அவர்கள் சொந்தமாக படைத்த தெய்வம்.

அதனாலேயே தமிழ்மன்னர்கள் கட்டிய கோயில் பிரம்மனுக்கு எதுவும் இல்லை. இதற்கும் ஆரியர்கள் ஒரு கதைகட்டி விட்டார்கள். 

நான்முக பிரம்மாவுக்கும், காக்கும் தெய்வமாகிய திருமாலுக்கும், தங்களில் யார் பெரியவர் விவாதம் உண்டாகி, சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக் கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் பிரம்மன் முடியைக் காணும் முயற்சியை விடுத்து, தாழம்பூவிடம் ஒரு பொய் சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார். சிவனின் முடியை, பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் மற்றும் பூசைகள் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். எனவே பிரம்மனுக்கு அரிதாகவே கோயில்கள் உள்ளன என்பதுதான் அந்தக் கதை.

ஆரியார்கள் கோயில் கூட கட்டிக் கொள்ள மாட்டார்கள் ஒட்டுண்ணியாக நாம் கட்டிய கோயில்களில் பூசை மட்டுமே செய்வார்கள்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே தமிழர் ஐந்திணைகள். திணைக்கடவுள்கள் பற்றி தொல்காப்பியம்,

'மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே' என்கிறது.

இதில்  பாலைத் திணை தவிர்த்து நான்கு திணைக் கடவுள்கள் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஏனெனில், பாலை' என்பது தனி நிலம் அல்ல. குறிஞ்சியும் முல்லையும் மழை இல்லாமல் காய்ந்து போன நிலமே பாலை எனப்படும். எனினும், பாலைக்கும் தெய்வம் உண்டு. ஒவ்வொரு திணை மக்களும் ஒவ்வொரு கடவுளை வழிபட்டனர். அவை மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை ஆகியன. 

முல்லை நில மக்களின் மாயோனை விஷ்ணுவாக்கி பத்து அவதாரங்கள் கொடுத்து இராமயணத்தில் இராமராகவும் மகாபாரதத்தில் கிருஷ்ணனாகவும் கட்டமைத்துக் கொண்டார்கள்.

தமிழர் வழிபாடு வாழ்ந்து சாதனை புரிந்தவர்களைத் தெய்வமாக்கி வழிபடுவது. சாதித்தவர்களுக்கு நடுகல் நட்டு அவர்களை வழிபடுவார்கள். 

நடுகல்லுக்கு ஒரு கதையைக் கட்டி சிவலிங்கமாக்கி சிவதொல்கதையைக் கட்டிக் கொண்டார்கள்.

ஆரியர் அல்லாத உலகினர் இன்றைய கணினி வரையிலாக எவ்வளவோ முன்னேறி விட்டார்கள். ஆனால் உலகில் ஆரியர்கள் மட்டும் சிறு துரும்பு அளவு கூட வளரவில்லை. ஒட்டுண்ணியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

அவர்களுக்கு சொந்தமான மொழி சம்ஸ்கிருதம் அதை தங்களுக்குள் பேசி பாதுகாக்கக் கூட வக்கில்லை. சம்ஸ்கிருதத்தை உலகளவில் வெறுமனே 14135 பேர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். உலக மொழிகள் எல்லாவற்றிலும் சில சம்ஸ்கிருத பெயர்ச் சொற்களை மட்டும் திணித்து உலக மொழிகள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்ததாக பீற்றுவார்கள். அந்த சம்ஸ்கிருதத்தைக் கூட வளர்த்தெடுப்பதற்கு பத்து விழுக்காடு தமிழ்சொற்களை அப்படியே எடுத்துக் கொண்டார்கள்.

சிவனியம் தமிழர்களுடையது; மாலியம் தமிழர்களுடையது. இந்தியாவில் கிருத்துவர்கள் அல்லாத, முகமதியர்கள் அல்லாத, சமணர்கள் அல்லாத, சீக்கியர்கள் அல்லாத, பௌத்தர்கள் அல்லாத அனைவரும் ஹிந்துக்கள் என்று சொல்;லி, நம்மையும் பிணைத்தே தங்கள் மதமாக முன்னெடுத்து வருகிறார்கள். ஒட்டுண்ணியாக அவர்கள் வாழ்வதற்கு என்றென்றும் நாமும் தேவையாக இருக்கிறோம். 

ஆரியர்களுக்கென்று உலகில் ஒரு நாடும் கிடையாது; ஆரியர்களுக்கென்று உலகில் ஒரு மொழியும் கிடையாது. சம்ஸ்கிருத எழுத்துக்களை கடனாகப் பெற்றுக் கொண்ட ஹிந்திக்கு மட்டும் நன்றியுணர்வோடு இருப்பார்கள். மற்ற மொழி ஆரியர்கள் எல்லாம் அந்தந்த மொழிகள் எல்லாம்  சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என்று ஒட்டுண்ணியாக வாழ்வதற்கு அந்தந்;;;த மொழிகளைத் தாழ்த்திக் கொண்டிருப்பார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தக் கோட்பாட்டில் இருக்கிற காரணத்தினால் தான் எல்லாமே தங்களுக்குத் தெரியும் எல்லாவற்றுக்கும் நாங்களே மூலம் என்று கதை மட்டும் கட்டுவார்கள் எந்த ஒன்றும் புதிதாக கண்டு பிடிக்க மாட்டார்கள். எச்ராஜாஷர்மா, சுப்பரமணிய சாமி, எஸ்வி சேகர் எல்லாம் தமிழகத்து ஆரியர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,786. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.