Show all

பாபா ராம்தேவ்வின் பொருள் பொதிந்த பேச்சு! இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடியின் மிக நெருங்கிய நண்பர், பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் மிகப்பெரிய வளர்ச்சியையும், மக்களின் வரவேற்பையும் பெற்றது. பற்பசை முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் கோவா தலைநகர் பானாஜி நகரில் 3 நாள் கோவா திருவிழா நிகழ்ச்சிகளில் பாபா ராம்தேவ் பங்கேற்றார். மக்கள் ஆரோக்கியமாக எப்படி வாழ வேண்டும், சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டியதன் தேவை ஆகியவை குறித்து பேசிய ராம்தேவ், மேடையில் யோகா செய்து காண்பித்தார்.

பதஞ்சலி நிறுவனம் என்பது ஆச்சார்யா பாலகிருஷ்ணா என்பவரால் தொடங்கப்பட்டது. லாப நோக்கமில்லாமல் தொடங்கப்பட்ட அறக்கட்டளையாக பதஞ்சலி நிறுவனம் செயல்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்து நாட்டைக் காக்கவேண்டும் என்று எண்ணினேன்.

நான் இந்த நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை சுகாதாரம், மருத்துவமனை, கல்வி, ஏழைமக்கள் நலன் ஆகியவற்றுக்காக செலவு செய்கிறேன். கடவுள் என்னைக் காப்பாற்றுவார். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. 

நான் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கிறேன் என்பதால், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது என்று எண்ண வேண்டாம் அதுபோன்று ஏதும் இல்லை. இப்போது நான் நினைத்தால்கூட, இந்தியத் தலைமை அமைச்சராகவோ, முதல்வராக, ஒரு பாராளுமன்ற உறுப்பனராகவோ ஆக முடியும்.

ஆனால், ஒருபோதும் நான் எதற்கு ஆசைப்பட்டதும் இல்லை, அவ்வாறு ஆக வேண்டும் என எண்ணியதும் இல்லை. எனக்கு தலைமை அமைச்சராகவோ அல்லது குடியரசுத் தலைவராகவோ ஆகும் விருப்பம் இல்லை. இவ்வாறு ராம்தேவ் தெரிவித்தார். பாபா ராம்தேவ்வின் இந்தப் பொருள் பொதிந்த பேச்சால் பாஜக மேல்மட்டமே ஆடிப்போய் கிடக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,749.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.