Show all

விமானம், தொடர்வண்டிகள் ரத்து செய்யுமளவிற்கு டில்லியில் காற்று மாசு

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் அளவு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நச்சுக்காற்றால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று மாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் தலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றில் மாசு புகைமூட்டம் போல் காணப்பட்டது. இதனால் விமானம் மற்றும் தொடர்வண்டி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என யுனைனெட் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், கடும் பனிமூட்டம் நிலவுவதால் 64 தொடர்வண்டிகள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 2 தொடர்வண்டிகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 தொடர்வண்டிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது என தொடர்வண்டி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டத்தில் விளம்பரத்திற்கு மட்டுந்தான் செலவு செய்யப் படுமா என்ன!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,603

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.