Show all

கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்! குடும்ப அட்டைக்கு ஆதார் காரணம் வேண்டாம்

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆதார் இல்லை என்ற காரணத்திற்காக தகுதி உள்ள குடும்ப அட்டைப் பொருள் வாங்குபர் பெயரை நீக்க கூடாது என மாநில அரசுகளுக்கு நடுவண் உணவு அமைச்சகம் கூறியுள்ளது.

சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவருக்கு ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் சிறுமிக்கு குடும்ப அட்டைப் பொருள் இல்லை என மாநில அரசு மறுத்து விட்டது. உணவு வாங்குவதற்கு பணம் இல்லாமல் அந்த சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.

அதன் காரணமாக ஆதார் அட்டை இல்லை என்றால் கூட குடும்ப அட்டை வைத்திருப்பவருக்கு குடும்ப அட்டைப் பொருள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு நடுவண் உணவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக நடுவண் உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் குடும்ப அட்டைப் பொருள் கிடையாது என்று மாநில அரசுகள் கூறக்கூடாது. ஆதார் அட்டை இல்லை என்கிற ஒரே காரணத்திற்காக தகுதி உள்ள பயன்பெறுவோர் பட்டியலில் இருந்து ஒருவரையும் நீக்கக்கூடாது என நடுவண் அமைச்சகம் கூறியுள்ளது.

-கண்கெட்ட பிறகு கண்கெட்ட பிறகு சூரிய வணக்கமா! குஜராத் தேர்தலில் நீங்கள் வெற்றியும் பெறலாம். ஜார்கண்ட் மாநிலத்தில் உயிரிழந்த சிறுமிக்கு உங்கள் சூரிய வணக்கம் என்ன தரும்?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.