Show all

சரக்குமற்றும்சேவைவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் 93 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தம்

இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசு நள்ளிரவில் கொண்டு வந்த சரக்குமற்றும்;சேவை வரியால் லாரியை வாங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் 28விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இரட்டை வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நடுவண் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

ஆனால், நடுவண் அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இரு தினங்களுக்கு நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்தது.

இதன் காரணமாக, நாடு முழுவதும் இன்றும், நாளையும் 93 லட்சம் லாரிகள் ஓடா.

தமிழகத்தை பொறுத்தவரை 4.5 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து துணிமணி, பருப்பு உள்ளிட்ட சரக்குகள் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்காக சிவகாசி பகுதியில் இருந்து லாரிகளில் பட்டாசு கொண்டு செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல்லில் 50 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.