Show all

33பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு! நாளை மாநிலங்களவை தேர்தல்

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாளை நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் 58 மாநிலங்களவை உறுப்பினர்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களைத்  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 

இதில் உத்தரப்பிரதேசம் -10, மராட்டியம், பீகார் -6, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம் -5, குஜராத், கர்நாடகம் -4, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசா -3, ஜார்கண்ட் -2, சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் -1 என மொத்தம் 59 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.

இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட உள்ள நிலையில் பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் 5 வேட்பாளர்களில் 4 பேரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிறுத்தியுள்ளது.

  கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களுக்கு 3 பேர் ஆளும் கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 இடங்களுக்கு பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்திலிருந்து ஒரு இடத்திற்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே மொத்தம் 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 25 மாநிலங்களவை உறுப்பினர்கள் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,734.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.