Show all

2ஜி அலைக்கற்றை சிந்தனைக் குறைபாட்டு வழக்கு தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரூ.1,76,000 கோடி அரசுக்கு கூடுதலாக இலாபம் கிடைக்கும் படி சிந்திக்காமல் குறைந்த விலைக்கு ஒதுக்கியது என கணக்கு தணிக்கை குழு சிந்தித்து குற்றம்சாட்டியது.

இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது நடுவண் புலனாய்வுத் துறை சிந்தனைக் குறைபாட்டு வழக்கு (சொத்து குவிப்பு வழக்கு மாதிரி) பதிவு செய்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப் படுவதாக இருந்த நிலையில்,

தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை அறங்கூற்றுவர் ஷைனி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு தயாராகாததால் மீண்டும் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு தயாராவதற்கு மேலும் 3 வார கால அவகாசம் தேவைப்படுகிறது எனக் கூறிய அறங்கூற்றுவர், 19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 ல் (05.12.2017) தீர்ப்பு நாள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.