Show all

தினகரன் கணிப்பு : ஒன்னரை மாதத்தில் தமிழக அரசு கவிழும்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முதல்வர் பழனிசாமிக்கு, தமிழக மக்கள் விரைவில் நல்ல பாடம் புகட்டுவர், தினகரன் கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கந்து வட்டி கொடுமையைத் தடுக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தார். ஆனால், பழனிசாமி அரசு இதை தடுக்கவில்லை. மாறாக, கந்துவட்டி குறித்து, கருத்து வெளியிட்ட நையாண்டி ஓவியர் பாலாவை, கைது செய்துள்ளது. தமிழக அரசு, தற்போது முடங்கி உள்ளது.

இராதா கிருட்டினநகர் தேர்தலை நடத்த, நடுவண், மாநில அரசுகள், தேர்தல் ஆணையம் மூலம் தாமதித்து வருவதாக தெரிகிறது.

அடுத்த ஒன்றரை மாதத்திற்குள், முதல்வர் பழனிசாமி அரசு கவிழ்ந்து விடுவது உறுதி. எங்கள் ஆட்சி அமைந்த பின், பழனிசாமி அரசின் ஊழல்கள் குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும். என் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும், பேச்சுரிமை, கருத்துரிமையை பறிக்கும் வகையில், இந்த அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு, தமிழக மக்கள் பாடம் புகட்டுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.