Show all

தெலுங்கானாவில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள தமிழ் வழியில் பயின்ற மதிப்பிற்குரிய கோபி அவர்கள்

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் வழியில் கல்வி பயின்று ஆட்சிப் பணித்துறை அதிகாரியான திருவள்ளூர் மாவட்ட இளைஞர் தெலுங்கானாவில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி தெலுங்கானாவில் மாவட்ட ஆட்சியரான கோபி திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் கிராமத்தில் போரியப்பா கமலா தம்பதினருக்கு இளைய மகனாக பிறந்துள்ளார். பொதட்டூர்பேட்டை அரசு பள்ளியில் தமிழ்வழியில் பயின்றுள்ளார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பட்டபடிப்பை நிறைவு செய்துள்ளார்.

கால்நடை மருத்துவராக வாழ்க்கையை தொடங்கிய கோபி தனது நண்பர்களின் உதவியுடன் இந்திய தேர்வாணையப் பணித்தேர்வில் வென்று தற்போது தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் ஆட்சியராக பணியாற்றி வருகிறார். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு விழுப்புணர்வும், வழிகாட்டுதலும் வழங்கபட வேண்டும் என கோபி கருத்து தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய கோபி அவர்களே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,677

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.