Show all

கேரளாவில் போதை பொருள் பறிமுதல் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தோகா வழியாக மலாவி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் போதை பொருள் கடத்தி செல்வதாக விமான புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகளுடன் விமான புலனாய்வு பிரிவினர் இணைந்து பயணிகளை சோதனை செய்தனர். இந்த விமானத்தில் செல்ல வந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர் போதை பொருளை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 14 கிலோ போதை பொருள் சர்வதேச மதிப்பில் ரூ.22 கோடி ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.