Show all

BRICS நாடுகள் சார்பில் வேளாண் ஆய்வு மையம் தொடங்க வேண்டும்

ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர், உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலான பிரச்சனைகளில் பருவநிலை மாறுபாடு முதன்மையானதாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும், ஐ.நா. சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் திரு. மோடி வலியுறுத்தினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பயனுள்ள எரிசக்தியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பிரிக்ஸ் நாடுகள் சார்பில் வேளாண் ஆய்வு மையம் தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.