Show all

ஜம்முக்காசுமீரில் தீவிரவாதிகள் தாக்குதல்

இந்திய எல்லையோரப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த தமிழக இராணுவ வீரர் தீவிரவாதிகள் தாக்குதலால் பலி.இவர் கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மணலிக்கரை தர்மராஜ் மகன் அனீஷ்.அனிஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

7தேதி இரவு இவர் இந்திய எல்லையோரப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது தீவிரவாதிகளால் தாக்கப்பட்டார்.இந்தச்சேதி அறிந்த மணலிக்கரை கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.