Show all

பிக்பாஸ் கதவு மூடியது; திறந்தது இன்னொரு கதவு; தர்சனுக்கு! முதல் படவாய்ப்பை அறிவித்த லிப்ரா

லிப்ரா ப்ரொடக்ஷன் தர்சனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. லிப்ரா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தர்சன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பிக்பாஸ் கதவு மூடியது; திறந்தது இன்னொரு கதவு!

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈழத் தமிழரான தர்சன் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில், பாம்பும் சாகாத தடியும் உடையாத பாணியில் விளையாடி வந்தார். இதனால் பிக்பாஸ் தலைப்பை  உறுதியாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் தர்சன். உறுதியாக பிக்பாஸ் விளையாட்டின் இறுதி நிலைக்குச் செல்வோம், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்து தர்சனுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. 

தர்சன் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சனுக்கு தமிழ் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. 

கவினை வைத்து நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் தர்சனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. லிப்ரா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தர்சன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

இதுதொடர்பாக லிப்ரா நிறுவனம் பதிவிட்டுள்ள கீச்சுவில் தெரிவித்திருப்பதாவது, அன்பான தர்சன், இறுதியாக உங்கள் விளையாட்டு முடிந்துவிட்டது. ஆனால் தமிழ்த்திரையுலகில் உங்கள் ஆட்டம் தொடங்கவுள்ளது. லிப்ரா புரடெக்ஷனிடமிருந்து வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,293.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.