Show all

பிக்பாஸ் பருவம் ஆறின் வெற்றியாளர் அசிம்

பெருந்தொகையை பரிசாகக் கொண்ட நூறுநாள் நீட்டிக்கும் ஒரு மாறுபட்ட, பெருங்கதையாடல் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி முன்னெடுத்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் ஒருங்கிணைப்பாளர் கமல்காசன். இதன் ஆறாவது பருவத்தின் தலைப்பை சின்னத்திரை நடிகர் அசிம் தட்டிச்சென்றுள்ளார்.

09,தை,தமிழ்த்தொடராண்டு-5124: பிக் பாஸ் பருவம் ஆறு நிகழ்ச்சி 105 நாட்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் தொடங்கி நேற்றுவரை தொடர்ந்தது. இதில் ஜி.பி.முத்து, அசிம், விக்ரமன், சிவின் உள்ளிட்ட மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஜி.பி முத்து தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிலேயே வெளியேறிவிட அடுத்தடுத்து மெட்டி ஒலி சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா என வரிசையாக  வெளியேறினார்கள். கடைசியில் மைனா நந்தினி, சிவின், அசிம், விக்ரமன் என நான்கு பேர் இருந்த நிலையில் மைனா நந்தினி இறுதிச்சுற்றுக்கு முன்பு வெளியேறினார்.

வெற்றியாளர் கோப்பைக்கான இறுதிச் சுற்றில் அசிம், விக்ரமன், சிவின்  என மூன்று பேர்கள் இருந்த நிலையில், நேற்றை பேரளவு நிறைவுநாள் நிகழ்ச்சி கலக்கலாக முன்னெடுக்கப்பட்டது.

பிக் பாஸ் நயவர்களிடமிருந்து கிடைத்த ஒப்போலைகளின் அடிப்படையில் சின்னத்திரை நடிகர் அசிம் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்து, நேற்று நடந்த நிறைவு நாள் விழாவில் கமல் அசிமுக்குக் கோப்பையை வழங்கியுள்ளார்.

இரண்டாம் இடத்தை விக்ரமனும், மூன்றாம் இடத்தை சிவினும் பெற்றனர். அனைவருக்கும் நமது வாழ்த்துகள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,502.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.