Show all

குழம்பும் இரசிகர்கள்! சின்மயியும், வைரமுத்துவும் கீச்சுவில் ஒருவருக்கொருவர் பின்தொடரலை நிறுத்திக் கொள்ளாதது ஏன்?

சகட்டுமேனிக்கு கருத்துமோதலில் ஈடுபட்டிருந்த சின்மயி- வைரமுத்து, கீச்சுவில் ஒருவருக்கொருவர் பின்தொடரும் அதிர்ச்சியில் இணையம் பரபரக்கிறது.

 

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து அடுத்து ஆட்சி அமைய வாழ்த்திவிட்டு வந்த வைரமுத்து தனது கீச்சுப் பக்கத்தில் ஸ்டாலினுக்கு சால்வை போர்த்திய புகைப்படத்தை வெளியிட்டு, 

தமிழினம் மீளவும்

தமிழ்நாடு வாழவும்

தளபதி ஆளவும்

வாழ்த்துச் சொன்னேன்

என்று கருத்தோவியம் தீட்டியிருந்தார்.

இது சூடு கிளப்பும் செய்தியல்ல.

சூடு கிளப்பும் செய்தியாக: வைரமுத்துவின் கீச்சுப் பதிவுக்கு இரண்டே சொற்களில் கருத்து பதிவிட்டிருக்கிறார். சின்மயி. 

சின்மயி இரசிகர்கள் வைரமுத்துவையையும், வைரமுத்து இரசிகர்கள் சின்மயியையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்குமாறு இணையத்தை கொஞ்ச காலம் கலக்கிக் கொண்டிருந்த சின்மயிக்கு என்னவாயிற்று என்று இருவரின் இரசிகர்களும் குழம்புகிறார்கள். 

இன்னும் ஏன் ஒருவருக்கொருவர் பின்தெடரலை நிறுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதுதான் அந்தக் குழப்பத்திற்கு காரணம். 

சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளுக்கே எதிரானவர்கள் ஒருவருக்கொருவர் பின்தொடரலை நிறுத்திக் கொள்ளும் இணையக் கலாச்சாரத்தை தாண்டி, இந்த சின்மாயி மற்றும் வைரமுத்து இருவரும் ஒருவருக்கொருவர் பின் தொடரலை நிறுத்திக் கொள்ளாமல் ஒருவர் இடுகைக்கு மற்றவர் கருத்திட்டுக் கொள்வது ஏன்? நாம் முட்டாள்களா? என்ற கேள்வி தீயாகிக் கொண்டிருக்கிறது இணையத்தில். 

 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,129.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.