Show all

டும், டும், டும், மாசி மாசந்தான் நல்ல நேரங்காலந்தான்! ஆரியாவுக்கு திருமணம்

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. ஆண்டுக்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். இவரது நடிப்பில் வந்த ராஜா ராணி என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் தற்போது ஆர்யாவின் திருமணம் உறுதியாகியுள்ளது. 

கஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் திரைப்படத்தில் தன்னுடன் கதைத்தலைவியாக நடித்த சாயிசாவை வாழ்க்கை துணையாக தேர்வு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் மூலம் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

காதலர் நாளான நேற்று நடிகர் ஆர்யா தனது கீச்சுப் பக்கத்தில் திருமணம் குறித்து முறையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அடுத்த மாதத்தில் சாயிசாவை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று சாயிசாவும் தனது கீச்சுப் பக்கத்தில் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். இருவரும் அடுத்த மாதத்தில் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 

இதற்கிடையில், சாயிசாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவரது அம்மா ஷகீன் அஹ்மீத் கூறுகையில், ஆர்யா எங்க வீட்டிற்கு மருமகனாக வருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

வரும் 26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120 (10.03.2019) ஞாயிற்றுக் கிழமை யன்று ஹைதராபாத்தில் வைத்து ஆர்யா-சாயிசா திருமணம் நடக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடைபெறும் எனத் தெரிகிறது.

இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகம் திரண்டு வந்து வாழ்த்து கூறும் என்பதால், பிரமாண்டமான திருவிழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,064.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.