Show all

தீயாகி வரும் வரவேற்புகளும், நன்றிகளும், வாழ்த்துக்களும்! வெளியேறுகிறாராம் விஜய்சேதுபதி; முரளிதரன் குறித்த படத்தில் இருந்து.

விஜய்சேதுபதிக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர் உலத்தமிழர்கள். முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்க இருக்கும் 800 படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்.

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கிரிக்கெட்டின் பிரபல மின்மினிகளான தோனி, சச்சின் ஆகியோரின் படங்களை அடுத்து இப்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாக இருக்கிறது. அதில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றதும் அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவானது. இப்படத்தை தார் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க எம் எஸ் சிறிபதி எழுதி இயக்குகிறார். இந்தப்படத்துக்கு 800 எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

சில மாதங்களில் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

முத்தையா முரளிதரன் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சேவை ஆதரித்துப் பல கருத்துகளைக் கூறியுள்ளதாகவும், விஜய்சேதுபதி மிகச்சிறந்த தமிழ் ஆர்வலர். இந்தப் படத்தில் நடிப்பது அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய களங்கமாக அமைந்து விடும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அறிவுறித்தி வருகின்றார்கள். முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது எனவும் தமிழர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
இதையடுத்து இந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னமும் தயாரிப்பு நிறுவனமோ விஜய் சேதுபதியோ இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. 

ஆனாலும் இந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதை வரவேற்றும், நன்றி தெரிவித்தும், பாராட்டியும் இணையப் பதிவுகள் தீயாகி வருகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,239.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.