ஒரே நாடு, ஒரே சாதி என்று சட்டம் கொண்டுவர, நடுவண் அரசு தயாரா என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நெத்திஅடி கேள்வி எழுப்பி அசத்தியுள்ளார். 24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடந்தது. அந்த விழா நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதுதான் இந்த நெத்திஅடி கேள்வியை நடுவண் அரசுக்கு முன்வைத்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது: கருணாநிதி எதிர் நீச்சல் போட்டே வாழ்ந்தார். அதுபோல, தற்போது எதிர்நீச்சல் அரசியல் செய்யும் மமதா பானர்ஜியை கொண்டு அவரது சிலையை திறக்க வைத்துள்ளது மிகவும் பொருத்தமானது. ஒரே கலாசாரம், ஒரே குடும்ப அட்டை, ஒரே கட்சி, ஒரே மதம் என்று மத்தியில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். ஒரே சாதி என்று சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படி ஒரு சட்டம் போட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படி செய்ய மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் மனுவின் மைந்தர்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,239.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.