20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய்யின் மகளான சாசா சிறகுப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்றதாக பள்ளி வெளியிட்ட தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீயாக்கி வருகிறார்கள். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்யோடு ஒரு பாடலில் நடனமாடி திரையுலகில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பாக 'ஜங்ஷன்' என்ற குறும்படத்தில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு காணொளி வர்ணனையாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் சஞ்சய். தனது முதல் பேட்டியாக 'அரிமா நம்பி', 'இருமுகன்' மற்றும் 'நோட்டா' படங்களின் இயக்குனர் ஆனந்த் சங்கரை பேட்டி எடுத்தார். இப்படி அண்ணன் ஊடகத்தில் அசத்திக் கொண்டிருக்க, தங்கை சாசாவோ விளையாட்டில் கலக்குகிறார். தற்போது சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார் சாசா. இந்தப் பள்ளி சிறகுப் பந்து குழுவினரின் புகைப்படங்கள் அதிகாரபூர்வ முகநூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் சாசா விஜய்யும் இடம்பெற்றுள்ளார். இந்தக் குழுவினர் அண்மையில் கலந்துகொண்ட 3 போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் தீயாக்கி வருகிறார்கள். தமிழக காசுக்கும், ஆட்சிக்கும் ஆசை பட்றாங்க! ஆனா காசா- கூசான்னு பேர் வச்சுக்கிட்டு, அகில ஒலகப் பள்ளிக்கூடத்திலேயல்லப்பா உலா வர்றாங்க. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,051.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.