Show all

விமானம் மூலம், சென்னைக்கு சிறுத்தைக்குட்டி கடத்திய தாய்லாந்து பயணி கைது

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில், காட்டு விலங்குகள் சட்ட விரோதமாக கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு கமுக்கத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்த வந்த காஜா மொய்தீன் அகவை45 என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. 

இதனையடுத்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அதில் சிறுத்தை குட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறந்து ஒரு மாதமேயான அந்த சிறுத்தை குட்டியையும், கடத்தல் நபரையும் வனத்துறையிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,051.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.