Show all

யாரோ துண்டுதல் பேரில், சின்மயி நெருப்பில் இறங்கி விட்டாரோ! இணையர்கள் கருத்துக் கணிப்பு கூட அவருக்கு ஆதரவாக இல்லையே

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதிமூன்று ஆண்டுகள் கழித்து பேசியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி: இணையம் மற்றும் பொது ஊடகங்கள் உள்ளிட்ட இத்துனை தகவல் தொடர்பு வசதிகள் உள்ள இந்தக் காலத்தில் கூட, தான் முன்னெடுத்த முயற்சி தோல்வி அடைந்ததாகக் கருதுகிறார் சின்மயி! பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்பதுதான் அவரின் விளக்கம்.

சின்மயி விளக்கம் குறித்து இணைய ஆர்வலர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது ஓர் இயங்கலை இதழ். அதில் இணைய ஆர்வலர்கள் 1.உண்மையைத்தான் சொல்கிறார் என்று பத்து விழுக்காடு பேர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 2.அடப் போங்கய்யா நீங்களும் உங்க மீடூவும் ஐம்பது விழுக்காடு பேர்கள் கோபித்துக் கொண்டிருக்கிறார்கள். 3.நாற்பது விழுக்காடு பேர்கள் விளக்கத்தை நல்ல விளக்கம் என்று பாராட்டியிருக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,975.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.