Show all

சிரிப்பழகி லைலாவை நினைவிருக்கிறதா! தமிழ்த்திரையைக் கலக்க மீண்டும் வருகிறாராம்

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிரிப்பழகி லைலா. திருமணத்தை தொடர்ந்து அவர் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதாக தெரிவித்துள்ளார்.

பிதா மகன், தீனா, தில் உள்ளிட்ட நெஞ்சில் நிற்கும் பல படங்களில் நடித்தவர் லைலா. தன் இயல்பான நடிப்பு அவரின் பெரும் பலமாக இருந்தது. முன்னனி நடிகர்கள் பலருடன் அவர் நடித்திருந்தார்.

லைலா கடைசியாக பரமசிவன் பாடத்தில் நடித்திருந்தார். திருப்பதி படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். பின்னர் மஹா சம்ருதா எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் லைலா மெஹதின் என்ற தொழிலதிபரை மணந்து கொண்டு பனிரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி விட்டார்.

இந்நிலையில் மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில், பெண்களுக்கு முதன்மைத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

இத்தனை நாட்களாக லைலா குழந்தைகளை வளர்ப்பதில் மட்டுமல்லாமல் புத்தக எழுத்தாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,954.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.