Show all

ரஜனிக்கு ரசிகர்கள் வழங்கியதா நாற்காலி! சமூக வலைதளங்களில் தீப்பரவல்

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்   இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியாகி உள்ளது. அதில் அனிருத் இசையமைப்பதாகவும் தெரிகிறது.

பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ள நிலையில் ரஜினியின் அடுத்த பட வேலைகள் பற்றிய பேச்சுகள் வெளியாகின்றன. குறிப்பாக ரஜினியின் அடுத்த படத்தை ஏஆர்முருகதாஸ் இயக்குவதாகவும், அதற்கு ரஜினி 120 நாட்கள் பங்குபெற ஒப்புதல் கொடுத்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகின.

அரசியலில் இறங்கும் ஆர்வத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த், புதிதாக நடிக்க உள்ள படத்தின் கதை அரசியல் கதையாம் . இந்த படத்துக்கு நாற்காலி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்துக்கு கதையை முருகதாஸ் சில நாட்களாக மெருகேற்றி வந்தார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். பொதுவாக முருகதாஸ் படம் என்றாலே அரசியல், வேளாண்;மை, ஊழல் உள்பட நிகழ்கால பிரச்சனைகளை கையிலெடுத்து அதை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பார். 

அந்தவகையில் ரஜினி நடிக்க உள்ள படம் அரசியல் படம் என தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண மனிதர் அரசியலுக்கு வந்து படிப்படியாக வளர்ந்து முதல்வர் நாற்காலியை பிடிப்பதுபோல் திரைக்கதையை முருகதாஸ் அமைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

எனவே இந்த படத்துக்கு நாற்காலி என்று தலைப்பு வைக்க ஆலோசனை நடந்து வருகிறது. இதேபோல் வேறு பெயர்களையும் பரிசீலிக்க முருகதாஸ் ஆலோசித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் 'நாற்காலி' என்ற ரஜினி படத்துடன் கூடிய ஒரு விளம்பர ஒட்டி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.  அதில் 'உங்கள் ஓட்டு உங்கள் குரல்' என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இது அதிகாரபூர்வமான விளம்பர ஒட்டி என்று இதுவரை தகவல் வெளியாக வில்லை. இது ரசிகர்களால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,033.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.