Show all

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மத்திய தொழிலக பாதுகாப்பு துறை ஐ.ஜி.ஸ்ரீராம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட மத்தியப் படை போலீசார் ஒத்திகையில் பங்கேற்றனர். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழக காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.