Show all

நீயா2 விரைவில்! அனைவரின் மனதையும் கவர்ந்த 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடலை இந்தப் படத்துக்காக மறுஉருவாக்கம் செய்துள்ளார்கள்

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முப்பத்தி யொன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற படம் 'நீயா'. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நீயா 2' என்ற பெயரில் இயக்குநர் எல்.சுரேஷ் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி மற்றும் காத்ரீனா தெரேசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை 'ஜம்போ திரைப்படம்' சார்பில் ஏ.சிறிதர் தயாரிக்கிறார்.

'நீயா' படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த 'ஒரே ஜீவன்' பாடலை இந்தப் படத்துக்காக மறுஉருவாக்கம் செய்துள்ளார்கள். மேலும், இத்திரைப்படத்தின் மற்ற பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரேவற்பை பெற்றுள்ளன.

'நீயா 2' குறித்து இயக்குனர் சுரேஷ் கூறுகையில்,  'நீயா' படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது பாம்பு. அதுபோலவே, 'நீயா 2' விலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது.  பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு  நடந்தது என தெரித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,981.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.