Show all

முருகதாசின் சர்கார் பணிந்தது! கதை தன்னுடையது என வழக்கு தொடுத்த வருண் இராசேந்திரனுக்கு மூலக்கதையாளராக அங்கிகாரம்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் படத்தின் கதை வருணுடையதுதான் என்று ஒரு வழியாக முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் என்ற படம் தீபாவளிக்கு வெளியாவதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய்யின் அரசியல் பேச்சு, ரசிகர்களை மட்டுமின்றி திரைத்துறை, அரசியல், மற்றும் சமூக ஆர்வலர்களும் எதிர்நோக்கியுள்ளனர். 

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது கதையை திருடி சர்கார் என பெயரிட்டுள்ளதாக வருண் ராஜேந்திரன் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் அப்படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. தீபாவளிக்கு படம் வெளிவருமோ வராதோ என ரசிகர்களும் படக்குழுவினரும் எதிர்பார்த்திருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அறங்கூற்றுவர் சுந்தர் முன்பு இன்று வந்தது. அப்போது கதாசிரியர் வருணுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார். இதையடுத்து படம் திரையிடும் போது வருண் ராஜேந்திரனின் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என்று முருகதாஸ் கூறினார். இதையடுத்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,956.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.