Show all

காணும் பொங்கல் கொண்டாடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! போட்டியாளர்கள் மற்றவர்கள் வீடுகளில் சந்தித்து நட்பை பறிமாறுகின்றனர்.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்குத்தான் பொங்கல் செய்யத் தெரியாதே. அதனால் பொங்கல் இல்லாமல், போட்டியாளர்கள் மற்றவர்கள் வீடுகளில் சந்தித்து நட்பை பறிமாறிக் கொள்கின்றனர்.

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பருவம் கடந்த ஞாயிறன்று முடிவடைந்தது. முதல் பருவத்தில் ஆரவ்வும், இரண்டாவது பருவத்தில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்தனர். மூன்றாவது பருவத்தில் முகென்ராவ் வெற்றி பெற்றுள்ளார்.

பிக்பாஸ் தலைப்பை வென்ற முகென்ராவுக்கு ரூ.50 லட்சத்துகான காசோலை வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது சகபோட்டியாளர்களின் வீட்டுக்குச் சென்று நேரத்தை செலவிட்டு வருகின்றனர் போட்டியாளர்கள். அண்மையில் வனிதா வீட்டில் இயக்குநர் சேரன், லாஸ்லியா உள்ளிட்டோர் சந்தித்துக் கொண்டனர்.

அதேபோல் சாண்டி இல்லத்தில் கவினும், செரின், சாக்சி அகர்வால் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் சேரன் இல்லத்துக்கும் சென்றிருந்தனர். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் தனது படவரி (இன்ஸ்டாகிராம்) பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் லாஸ்லியா, “முதலில் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்து அளவு கடந்த அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரையில் நன்றி என்பது மிகச் சிறிய சொல்தான். அது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது.

நான் மிக மிக உங்களை நேசிக்கிறேன். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு வியப்பாக உள்ளது. உறுதியாக உங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவேன். பெருமைப்படுத்துவேன். நான் உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,301.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.