Show all

தீயாகிவரும் காணொளி! நடிகை மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறி கமல்ஹாசனை சந்திக்கும் முன்னோட்டக் காணொளி

பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகை மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறி கமல்ஹாசனைச் சந்திக்கும் முன்னோட்டக் காணொளி இன்று மாலையிலிருந்து தீயாகி வருகிறது.

32,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியின் பரபலமான போட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இந்தக் கிழமை வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் அபிராமி நாளை நடக்கவிருக்கும் வெளியேற்றப் படலத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில்தான் நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இன்று வெளியான முன்னோட்டக் காணொளியில் மதுமிதா வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் வீட்டில் நடிகை மதுமிதா கையை அறுத்துக் கொண்டதால், அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாக நேற்று தகவல்கள் பரவின. அதை நிரூபிக்கும் வகையில் நடிகை மதுமிதா கையில் கட்டுடன் கமல்ஹாசனை சந்திக்கும் காட்சியே முன்னோட்டக் காணொளியாக இருக்கிறது.

அந்தக் காணொளியில் நடிகர் சேரனும், ‘நடிகை மதுமிதாவின் இந்தச் செயல் தவறான எண்ணம். அவர் எடுத்த முடிவு தவறான முடிவு’ என்று ஆவேசமாக சொல்கிறார். கமல்ஹாசனும் உங்களுடைய தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கிறார். என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில். இன்று வழக்கமான பிக்பாஸ்; நேரத்தில் தெரிந்து விடும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,247.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.